Monday, April 9, 2012

வேரென நீயிருந்தாய்...(52)

அம்மாவின் அந்திரெட்டியை சாட்டிக்கடற்கரையில் முடித்துவிட்டுப் பின் வீட்டுக்கிருத்தியத்திற்குப்பதிலாக திருநெல்வேலி முத்துத்தம்பி பள்ளிக்கூடத்தில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் மதியபோசனத்தையும் முடித்துவிட்டு மறுநாள் நதீஷாவும் நானும் காலையிலேயே புறப்பட்டு வவுனியா வந்து கண்டிக்குப் பயணமானோம்.

“ஒருமதிரி அம்மாவின்ரை அலுவல்கள ஒழுங்காச் செய்து முடிச்சிற்றம் என?”

“ஓம். நீங்களும் என்னோட வந்ததால எனக்கும் பெரிய துணையா இருந்திச்சு”

“வாழ்நாள்பூரா இனி நாங்க ரெண்டுபேரும் ஒராளுக்கொராள் துணையாத்தானே இருக்கப்போறம்”

“ம்ம்ம்... பார்த்தீங்களா? மூண்டு நாளைக்குமுதல் குருந்துவத்தையிலயிருந்து வெளிக்கிடேக்குள்ள தனியாளா அடுத்து என்ன செய்யிறது எண்டே தெரியாம வெளிக்கிட்டன். ஆனா இண்டைக்கு?”

“ஏன் இண்டைக்கு என்ன?”

“இண்டைக்கு என்னவா? அண்டைக்கு வெளிக்கிடேக்குள்ள எனக்கெண்டு ஒருத்தரும் இருக்கேல்ல. ஆனா இண்டைக்கு எனக்கெண்டு காதலியா, மனைவியா, அம்மாவா எல்லாத்திலும்விட ஒரு நல்ல friend ஆ, எல்லாமா நீங்க இருக்கிறீங்க. இதைவிட வேற எனக்கென்ன வேணும்?”

“ஹலோ சேர்! இன்னும் எங்களுக்குக் கல்யாணம் ஆகேல்ல. அதுக்குள்ள wife எண்டெல்லாம் கதைக்க வெளிக்கிடுறியள்”

“என்னைப் பொறுத்தவரைக்கும் அக்காக்கு முன்னால அம்மா வாங்கின சங்கிலியப் போட்டதுதான் நான் உங்களுக்குக் கட்டின தாலி. ஆனபடியா இப்ப நீங்க என்ரை wife. அதாலதான் அந்திரெட்டி செய்யேக்குள்ள உங்களை எள்ளும் தண்ணியும் இறைக்கச் சொல்லிவிட்டது”

“ஓ! அப்ப இனி அடுத்து என்ன செய்யப் போறம்?”

“கல்யாணம் முடிஞ்சா அடுத்தது என்னவெண்டு தெரியாதா?”

“வேண்டாம். உங்கட பேச்சும் பார்வையும் ஒருமாதிரிப் போகுது”

“ஏன்? என்ன மாதிரிப் போகுதாம்?”

“இப்ப எதுக்கு இவ்வளவு கிட்டவா உங்கட முகத்தைக் கொண்டுவாறீங்க?”

“நான் கதைக்கிறது உங்களுக்கு வடிவாக் கேக்கேல்லையோ எண்டு நினைச்சுத்தான்”

“அதெல்லாம் வடிவாக் கேக்குது. நீங்க வடிவா comfortable-ஆ முதல் இருந்து வந்தமாதிரியே இருந்து கதையுங்கோ. எனக்கு காது வடிவாக் கேக்கும்”.

“உங்களை.....”

“என்ன உங்களை? ஏன் நிப்பாட்டீற்றீங்கள்? மிச்சத்தையும் சொல்லுங்கோ”

“இல்ல நான் சொல்ல மாட்டன்”

“பரவாயில்லை சொல்லுங்க”

“ஊஹும், நான் சொல்ல மாட்டன்”

“அய்! வெக்கத்தைப்பாரு. சும்மா சொல்லுங்க...”

“போங்கோ நீங்க. நான் இனி உங்களுக்கு ஒண்டுமே சொல்ல மாட்டன்”

தலையைத் திருப்பிக் கொண்டேன்.

“அச்சாப்பிள்ளை! என்ரை செல்லமெல்லா! எனக்குச் சொல்லுங்கவன்”

தன்கைகளிளால் என் முகத்தினைத் தன்னை நோக்கித் திருப்பினாள். இருவர் முகங்களும் நேரெதிரே மிகச்சிறிய இடைவெளியில்....... அவள் கண்கள் காந்தமாய் என்கண்களை ஈர்த்துக் கொண்டிருக்க வைத்தவிழி வாங்காமல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக .....


எனக்குள் ஏதோவெல்லாம் செய்தது, கண்கள் தாமாகவே தாழ்ந்தன.

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே


ஒருவர் மூச்சுக்காற்று மற்றவர்மேல் உஷ்ணத்தை உண்டாக்கியது. இன்னும் விட்டால் எங்கள் கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடலாம் என்கின்ற விழிப்புணர்வு வர

திரும்பிக் கொண்டேன்.

“நாங்க கண்டியில சின்னதா engagement வைப்பமா?”

“உங்களை disturb பண்ணீற்றனா ஜேந்தன்? I'm sorry. நான் வேணுமெண்டு செய்யேல்ல”

“நான் சீரியசாத்தான் கேக்கிறன். எதுக்கு நாங்க wait பண்ணவேணும்”

“அம்மா செத்து ஒரு வருஷம் ஆனாப்பிறகுதானே...”

“இது அம்மா விரும்பின கல்யாணம். அதோட இன்னும் கொஞ்ச எங்கட நாளில வருஷப்பிறப்பும் வந்திரும். அதுக்குப்பிறகு செய்யலாம் தானே. சிலபேர் அப்படிச் செய்யிறவை”

“உங்கட விருப்பம் ஜேந்தன்”

“ஏன்? அப்ப உங்களுக்கு விருப்பமில்லையா?”

“என்ன கதைக்கிறீங்க நீங்க? நான் உங்களை உங்கட சொந்தக்காரர் ஏதும் சொல்லுவினமோ எண்டுதான் யோசிக்கிறன்”

“மற்றாக்களுக்காக நாங்க வாழேலாது. இது எங்கட வாழ்க்கை.. எங்கட விருப்பப்படிதான் நாங்க வாழவேணும். மற்றாக்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருந்தாச் சரி”

“அப்பிடியெண்டால் எனக்கு double OK.”

“சரி நதீஷா! அப்ப நாங்க இனி எங்கடபாட்டில நித்திரையைக் கொள்ளுவம்”

“ஏன்? உங்களுக்கு நித்திரை வருகுதா?”

“வரயில்லைத்தான். ஆனா இப்பிடி உங்களுக்குப் பக்கத்திலையிருந்து பார்த்துக்கொண்டிருந்தா ஏதும் தப்புத்தண்டா நடந்திருமோ எண்டு பயமாயிருக்கு”

“ஹலோ சேர், நீங்க இப்ப bus-க்குள்ளதான் இருக்கிறீங்க”

“எங்கட முதல்முத்தம் கூட சட்டப்படியான கல்யாணத்திற்கு பிறகு இருக்கிறதுதான் எனக்கு விருப்பம்”

“ஏன்? நான் உங்களை kiss பண்ணீருவன் எண்டு பயப்பிடுறீங்களா? இவ்வளவுநாளா என்னோட பழகி என்னைப்பற்றி நீங்க தெரிஞ்சுகொண்டது இவ்வளவு தானா?”

“Sorry நதீஷா. அம்மா மேல promise நான் உங்களைப் பற்றி அப்பிடி நினைக்கேல்லை. எனக்கு என்னிலைதான் நம்பிக்கை குறைஞ்சுகொண்டு போகுது”

“இவ்வளவுநாளும் ஒழுங்கா இருந்தனீங்கதானே. பிறகென்னத்துக்குப் பயப்பிடுறீங்க?”

“முந்தி நீங்க ஆரோ. ஆனா உங்கட கழுத்தில இந்தச் சங்கிலியப் போட்டாப்பிறகு எனக்கு நீங்க என்ரை wife ஆத்தான் தெரியுறீங்க. அதாலதான் என்னைக் control பண்ணேலாமப் போயிருமோ எண்டு சாடையாப் பயம் வந்திற்று. அஞ்சுவது அஞ்சாமை பேதமை எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார்”

“Don't worry ஜேந்தன். நீங்க அப்பிடிச் செய்ய மாட்டீங்க. உங்களால உங்களைக் control பண்ணேலும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. anyway இப்ப நாங்க நித்திரையைக் கொள்ளுவம். பிறகு நாளைக்கு வேலைக்கும் போகவேணும்”


2002 April 24, அதுவொரு புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அன்றைய நாள் காலை, எளிமையாக எங்கள் பதிவுத்திருமணம் நதீஷாவின் வீட்டில் நடைபெற்றது. மதிய உணவின் பின்னர். புனித தலதா மாளிகைக்குச் சென்று பௌத்த மதகுருமார்களிடம் ஆசிபெற்றுப் பின்னர் கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலில் அருச்சனை செய்துவிட்டு குறிஞ்சிக்குமரனுக்குச் சென்று மாலைமாற்றிக் கொண்டு குருந்துவத்தையில் எனது இருப்பிடத்திற்குத் திரும்பினோம். வீடு எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபனும் வேறு சில நண்பர்களும் அங்கே எமக்காகக் காத்திருந்தனர்.

இரவ 07:30 மணியளவில் Devons-இலிருந்து இரவுணவு எடுத்துவரப்பட அனைவரும் ஒன்றாய் உணவருந்தினோம். அதன் பின்னர் மற்றவர்கள் யாவரும் விடைபெற்றுச் செல்ல நானும் நதீஷாவும் தனித்து விடப்பட்டோம்.

நதீஷா குளித்துவிட்டு வர நான் குளியலறைக்குச் சென்றேன். குளித்துவிட்டுவர வீட்டின் ஒரு மூலையில் விளக்கு வைத்திருந்தாள். நான் வந்ததும் என்னையும் அழைத்துச் சென்று அருகே நிற்கவைத்துவிட்டு விளக்கேற்றி வணங்கிவிட்டு என் காலில் விழப் போனவளைப் பதற்றத்துடன் தடுத்தேன்.

“இதென்ன நதீஷா? இதென்ன பழக்கம்?”

“ஏன்? இதில என்ன தப்பு?”

“என்ரை காலில விழுகிறீங்க? அப்பிடிச் செய்யாதீங்க சரியா?”

“உங்களுக்குப் பிடிக்கேல்லையெண்டா நான் இனிச் செய்யேல்ல. ஆனா எங்கட வழக்கப்படி நாங்க நல்லநாள் விஷேஷ நாள்களில பெரியாக்களின்ரை காலில விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கிறனாங்க”

“தெரியும். நானும் சிங்கள ஆக்கள் கனபேரை அப்பிடிச் செய்யேக்க பார்த்திருக்கிறன். ஆனா நாங்க ரெண்டு பேரும் சமம். எங்களில ஒராள் பெரிசு இன்னொராள் சின்னனெண்டு இல்லை”

“OK. தங்கள் சித்தம் என் பாக்கியம்” சிரி்த்தாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.

“room அங்கை ready பண்ணி வைச்சிருக்கு”

அறைக்குள் நுழைந்தோம்.

இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
.........

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன்துளி சிந்தும் பைங்கிளி






பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51

5 comments:

  1. >“இண்டைக்கு என்னவா? அண்டைக்கு வெளிக்கிடேக்குள்ள எனக்கெண்டு ஒருத்தரும் இருக்கேல்ல. ஆனா இண்டைக்கு எனக்கெண்டு காதலியா, மனைவியா, அம்மாவா எல்லாத்திலும்விட ஒரு நல்ல friend ஆ, எல்லாமா நீங்க இருக்கிறீங்க. இதைவிட வேற எனக்கென..
    --
    தலைவரே ரொம்ப தூள் கிளப்பிறீர்கள்.

    ReplyDelete
  2. அப்ப இது 'முற்றும்' ஆ?

    அடுத்த பதிவுக்கு என்ன தலைப்பு?

    ReplyDelete
  3. முற்றும் ஆனா இன்னும் முற்றேல்லை. :-)

    ReplyDelete
  4. எப்பிடி முற்றும் . முள்ளிவாய்க்காலில ஆரம்பிச்ச கதையில இன்னும் கனக்க சஸ்பென்ஸ் இருக்கு.
    முற்ற விட்டிராதேங்கோ. நாங்க இன்னும் கனக்க எதிர்பாக்கிறம்.
    (;-))

    ReplyDelete
  5. //எப்பிடி முற்றும் . முள்ளிவாய்க்காலில ஆரம்பிச்ச கதையில இன்னும் கனக்க சஸ்பென்ஸ் இருக்கு.
    முற்ற விட்டிராதேங்கோ. நாங்க இன்னும் கனக்க எதிர்பாக்கிறம். //..
    athe thaan.

    ReplyDelete