Friday, September 16, 2011

வேரென நீயிருந்தாய்...(34)

“ஒயாட்டத் தண்ணுவத, ஒயாத்தமாய் மகே ஜீவிதய?”

காலடியில் நிலம் வழுவுவதாய் உணர்ந்தேன். கடைசியில் தீபனின் கணிப்பு சரியாகி விட்டது. எதிர்பார்த்திராத நேரத்தில் அவள் வெளிப்படுத்திய வார்த்தைகள் திகைபை்பையே உண்டு பண்ணியது. வாயடைத்துப்போய் நின்றேன். எதையும் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்பது எவ்வளவு உண்மையானது! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்து நிற்பதாய்ப் பட்டது. ஆயினும் அடிமனதிற்குள் அவள் வார்த்தைகள் ஒருவித சந்தோஷத்தைப் பிரசவிப்பதையும் என்னால் உணரமுடிந்தது. இது ஒருபோதுமே சரிப்பட்டு வராது. என்ன செய்யலாம்? எப்படி இவள் மனதைக் காயப்படுத்தாமல் இதிலிருந்து வெளிவரலாம்? சிந்தனைகள் ஓடத் தொடங்கின.

“ஏன் திடீரெண்டு silent ஆகிற்றீங்க?”

நதீஷாவின் வினா சிந்தனைகளை அறுத்தது. இப்போதுகூட எதுவும் ஆகிவிடவில்லை. இவளுக்குப் புரியும்படி எடுத்துக் கூறினாள் புரிந்துகொண்டு விலகிவிடுவாள் என்கின்ற நம்பிக்கை துளிர்விட்டது.

“என்ன நீங்க? என்னெல்லாமோ சொல்லுறீங்க. உங்களுக்கு என்ன நடந்தது?”

“ஏன் நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்லையா? You are my life ஜேந்தன்”

“Please நதீஷா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஏன் வீணா உங்கடை மனதை அலைய விடுறீங்க?”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க. love பண்ணுறது பிழையா?”

“love பண்ணுறது பிழையில்லத்தான். ஆனா அந்த love-ஆல பல பிரச்சினைகள் வருமெண்டால், அதைத் தவிர்க்கிறது நல்லதுதானே”

“ஏன்? பிரச்சினைகளை face பண்ண உங்களுக்குப் பயமா?”

“அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறேர். love பண்ணினா marry பண்ண வேணும். நாங்க ரெண்டுபேரும் marry பண்ணிறதெண்டா சும்மாவா? அதுவும் நாடு இப்ப இருக்கிற நிலையில நரிக்கு உழுந்து வடை கேட்ட மாதிரி. இதெல்லாம் சரிப்பட்டு வராது.”

“அதுதான் ஏனெண்டு கேக்கிறன்”

“நீங்க சிங்களம். நான் தமிழ். நாங்க சேர்ந்து வாழுறது சரிப்பட்டுவராது.”

“சும்மா சும்மா தமிழ் சிங்களம் எண்டுசொல்லி மழுப்பாதீங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையா?”

“ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஒரு friend-ஆ உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அதுக்கு மேல love எல்லாம் வேண்டாம்..”

“உங்கட நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க உங்களுக்கு என்னில love இல்லையெண்டு?”

“எதை நீங்க love எண்டு சொல்லுறீங்க?”

“dictionary கொண்டுவந்து தரவா?”

“இஞ்ச வாங்க! உங்களுக்கு எப்ப இருந்து என்னைத் தெரியும்? கம்பசுக்கு வந்தாப் பிறகுதானே! அதுவும் நாங்க group mates-ஆ இருந்ததாலதானே பழகினம். சிலவேளை நாங்க ரெண்டுபோரும் group mates-ஆ வந்திருக்காட்டி சும்மாதானே இருந்திருப்பம். சிலவேளை எங்கட பெயர்கள்கூட ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிருக்காது. அப்பப் பிறகென்ன? இதெல்லம் சும்மா உடம்பு செய்கிற வேலை”

“ஹலோ சேர்! கொஞ்சம் அமத்தி வாசிக்கிறீங்களா? விட்டா ஏதோ நான் அலையிற மாதிரிக் கதைச்சுக்கொண்டே போறீங்க?”

“sorry நான் அப்பிடி mean பண்ணேல்லை. ஆனா...”

“என்ன ஆனா ஆவென்னா எண்டுகொண்டு? உங்களுக்கும் என்னில love இருக்கு. ஆனா உங்கட Ego அதைச் சொல்ல விடாமத் தடுக்குது. அவ்வளவு தான்”

“நான் என்ன சொல்ல வாறனெண்டா, love எண்டு ஒண்டில்லை. இதெல்லாம் ஓமோன்களின்ரை அட்டகாசம். அவ்வளவுதான். அதை விளங்கிக்கொண்டால் சரி”

“சும்மா சும்மா விதண்டாவாதம் கதைக்காதீங்க. love வந்து மனசு சம்பந்தப்பட்டது. நான் love-ஐப்பற்றிக் கதைக்கிறன். நீங்க lust-ஐப்பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறீங்க. வருகுது...”

“lust இல்லாம love இல்லை”

“உங்களுக்கு வேணுமெண்டால் அப்பிடியிருக்கலாம்”
அவள் முகம் சுழிக்கத் தொடங்கியது. மீண்டும் பிரச்சனை பெரிதாகி விடுமோ என்கின்ற பயம் எழுந்தது.

“சரி OK. இதைப்பற்றிக் கதைக்க வெளிக்கிட்டா எப்பையும் பிரச்சனைதான் வருகுது. அதால இந்த விஷயத்தைப் பற்றிக் கதைக்கிறதை இனி நிப்பாட்டுவமா?”

“நான் சொல்ல வேண்டியதை உங்களுக்குச் சொல்லிப் போட்டன். you are my life அதில மாற்றம் இல்லை.”

“என்ன நீங்க? சும்மா சும்மா அதையே சொல்லிக்கொண்டு. ஒரு நாலு வருஷமாத் தான் என்னோட பழகிறீங்க. அதுக்குள்ள உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியுமெண்டு love பண்ணுறீங்க?”

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”


1 comment:

  1. ஆங், இப்ப அவ சிங்கப்பூரிலயே? இல்லாட்டி "நீ அங்கே, நான் இங்கே..." அப்படியா?

    (ஹீ ஹீ நான் சும்மா நக்கல் விடுறன், நீங்கள் "உண்மையாகவே" கற்பனைக் கதைதான் எழுதுகிறீர்கள் என்று எனக்கு உண்மையாகப் புரிகிறது.)

    ReplyDelete