Sunday, November 27, 2011

வேரென நீயிருந்தாய்...(45)

“Sorry நதிஷா! I'm extremely sorry. என்னால என்னைக் control பண்ண முடியேல. அதுதான் உங்கட தோளில சாஞ்சிற்றன். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க. இது நான் வேணுமெண்டு செய்யேல்ல. என்னை அறியாம நடந்திற்றுது.”

“It's OK. அதுக்கேன் கவலைப்படுறீங்க?”

“இல்லை உங்களுக்கு ஏற்கனவே wedding fix பண்ணியாச்சு. இந்த நேரத்தில நான் வந்து உங்களோட இப்பிடிச் செய்தது. தப்பு”

“அப்ப எனக்கு wedding fix பண்யேல்லையெண்டா இப்பிடிப் பழகியிருப்பீங்களா?”

“ம்... அதுக்கெல்லாம் நான் குடுத்து வைக்கேல்ல”

“நீங்க என்ன சொல்லுறீங்க?”

“சரி அதையெல்லாம் விடுங்க. முடிஞசு போனதுகளைப் பற்றிக் கதைச்சு இனி என்ன பிரயோசனம்?”

“ஜேந்தன் என்ரை கண்ணைப் பார்த்துக் கதையுங்க. உண்மையைச் சொல்லுங்க நீங்க எதையோ என்னட்டை இருந்து மறைக்கிறீங்க.”

“வேண்டாம். அதெல்லாம் காலம் கடந்து போய்ச்சு. நான் பேயன் இப்ப வந்து அதுகளைக் கிளறிக்கொண்டு”

“இப்ப எந்த இடத்தில நிக்கிறம் எண்டு தெரியும் தானே. please இப்பவாவது உண்மையைச் சொல்லுங்க ஜேந்தன்.”

“நா...நான் உங்... உங்க....உங்களை ல..ல.. லவ் பண்ணுறன்”

“ஓ! அதென்ன ல..ல..லவ்? அப்பிடியெண்டா என்ன?” புன்னகைத்தாள்

“இதுக்குத்தான் நான் வேண்டாமெண்டு சொன்னான். இப்ப ஒண்டுமே விளங்காதமாதிரி நடிக்கிறீங்க. சரி விடுங்க. அதெல்லாம் இனிச் சரி வராது.”

“ஏன் ஜேந்தன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“இல்லை உங்களுக்குத்தான் ஏற்கனவே wedding fix ஆகிற்றுதே”

“ஓம்! அதுக்கென்ன?”

“அதுக்கென்னவா? இந்த நேரத்தில வந்து என்ரை லவ்வை உங்களிட்டைச் சொல்லுறனே. எவ்வளவு Cheap-ஆ உங்களோட நடந்து கொள்ளுறன்”

“ஓ! நீங்க என்ன லவ் பண்ணுறீங்களா? எப்ப தொடக்கம்?”

“farewell party யிலயிருந்து”

“அப்பையேன் என்னட்டைச் சொல்லேல்ல”

“எப்பிடிச் சொல்லுறது? அக்காவைப் பற்றி நான் உங்களிட்டை ஒண்டுமே சொல்லயில்லை. பிறகு அக்காவைப்பற்றித் தெரிய வரேக்கை எங்களுக்குள்ள பிரச்சனை வந்து பெரிசாகி பிறகு அதால பிரியிறதிலும் விட முதலிலயே பிரியிறது நல்லதுதானே.”

“அப்ப இப்ப மட்டும் பிரச்சினையில்லையோ?”

“இல்லை இப்பத்தான் அக்காவைப்பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமே! இதைவிட உங்களுக்கு நான் எதையுமே மறைக்கேல்லை. பிறகு எதுக்கு நான் பயப்பிட வேணும்?”

“ஆனா எனக்குத்தான் wedding fix ஆகிற்றுதே. அப்ப அது உங்களுக்குப் பிரச்சினையாத் தெரியேல்லையா? இல்லாட்டி நான் சிங்களம் நீங்க தமிழ் எண்டது உங்களுக்குப் பிரச்சினையாத் தெரியேல்லையா?”

“Please நதிஷா! என்னை torture பண்ணாதீங்க. ஏதோ நீங்க கேட்ட வேகத்தில நான் உண்மையைச் சொல்லிப் போட்டன். எல்லாத்தையும் மறந்திற்று வாங்க. நாங்க போவம். நீங்க இனியும் என்னோட இருக்கிறது நல்லதில்ல.”

“ஓ! என்னை வேறையேதும் செய்யிற ஐடியாவும் ஐயாக்கு இருக்குது போல?”

என்ன இவள். இப்பிடிக் கதைக்கிறாள்?

“நதிஷா please. என்னிலதான் எல்லாப் பிழையும். இனி நீங்க வேறை ஒருத்தருக்கு wife-ஆகப் போறனீங்க. please வாங்க போவம்”.

”ஓ! அப்ப நான் வேறையாருக்கோ wife-ஆகப் போறன் எண்டதுதான் இப்ப உங்கட பிரச்சினையா?”

தலையசைத்தேன்.

“அப்ப அந்த வேறையாரோவா நீங்க ஏன் இருக்கக்கூடாது?”

“என்ன கதை கதைக்கிறீங்க நீங்க? உங்களுக்குத்தான் ஏற்கனவே வேறைஒராளோட wedding fix ஆகீற்றுதே”

“ஓம்!. அதுதான். நீங்க ஏன் அந்த வேறை ஆரோவோ இருக்கக்கூடாது?”

“சும்மா விசர்க்கதை கதைக்காதீங்க. அவரின்ரை அம்மாக்கெல்லாம் உங்களில சரியான விருப்பம். ஒவ்வொரு நாளும் உங்களோட phone-இலயெல்லாம் கதைக்கிறவா எண்டுவீங்க? எப்பிடி அவாவுக்கெல்லாம் துரோகம் செய்யேலும். சும்மா மனசை அலைய விடாம வாங்க போவம்.”

“அந்த அம்மாவுக்கு நான் ஏன் துரோகம் செய்யப் போறன்?”

“என்ன நீங்க? எல்லாம் விளங்கித்தான் கதைக்கிறீங்களா?”

“நான் எல்லாம் விளங்கித்தான் கதைக்கிறன். நீங்கதான் எதுவுமே விளங்காமக் கதைக்கிறீங்க.” சிரித்தாள்.

“சும்மா குழப்பாம வாங்க போவம்”

“அப்ப சரி இந்தாங்க இந்தப் parcel-ஐப் பிரிச்சுப் பாருங்க எல்லாம் விளங்கும்”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44

6 comments:

  1. parcel இல் அம்மா வாங்கிய chain இருக்கோ....

    ReplyDelete
  2. அம்மா வாங்கின சங்கிலி நதீஷாவிற்கா?

    ReplyDelete
  3. கதை நல்லத்தான் போகுது. ஆனா நீங்க கொஞ்சம் கல்லுளி மங்கன்தான்

    ReplyDelete
  4. u r good in story telling art.

    ReplyDelete
  5. நதீஷாவின் தோளிற் சாய்ந்து தூங்கிவிட்டீர்களா? எங்கே அடுத்த அத்தியாயம்? :-)

    ReplyDelete
  6. suspence தாங்க முடியவில்லை சாமி , அடுத்த அத்தியாயம் எப்ப?

    ReplyDelete