Sunday, September 26, 2010

நினைவுகளில் நீ!


பசித் தீயையெரித்த
பட்டினித் தீ நீ!
பன்னிரு நாட்கள்
பசியுனக்குத் தீனி!

விடுதலை வேள்வியில்
எழுந்த யாகத்தீ!
அந்த யாகத்தில்
சொரிந்தவாகுதி நீ!

தீயதே தீண்டாத
தியாகம் நீ!
தீயுமே தீண்டிடாதவுன்
திருமேனி!

அகிம்சை வாதி
மகாத்மா காந்தி
அவரையும் விஞ்சி
நீ காலத்தீ!

நாட்டுக்காய் உருகிய
மெழுகு வர்த்தி!
ஞாலம் வணங்கிடும்
திலீபம் நீ!

No comments:

Post a Comment