Wednesday, June 11, 2014

சொல்லிவிட்ட சொல்




வார்த்தைகள் தடித்து
சுயங்கள் காயமான
தருணத்தில்,

புணர்தலின் உச்சப்பொழுதில்
சீறிப்பாயும் விந்தென
பீறிட்டு வந்த சொல்,

விழுந்து முளைத்து
தழைத்து சடைத்து
சல்பீனியாவாய்

மனக்குட்டைகளில்
ஊறிக்கிடந்த நீரன்பை
மூடி மறைக்குமினி

No comments:

Post a Comment