பேய்களும் பேயர்களும் பேய்க்காட்டல்களும் -இனை வாசித்த பல நண்பர்கள் facebook மூலமாகவும், மின்மடல்கள் மூலமாகவும் சில கேள்விகளையும் தங்களின் கருத்துக்களையும் எழுப்பியிருந்தனர். நேரமின்மை காரணமாக அவர்களுக்கான எனது பதில்களை உடனடியாகத்தர முடியவில்லை. சற்றுமுன்னர் அழைப்பினை ஏற்படுத்தியிருந்த நண்பன் ஒருவனின் நினைவூட்டலால் மீண்டும் பேய்க்காட்ட(?) வேண்டிய நிலை.
சிவபுராணத்தில் “கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்...” என்று வருவதாகவும் அந்தக்காலத்திலேயே பேய்கள் பற்றிய பிரச்சனை இருந்திருக்கவேண்டும் என்றும், மேலும் சமயபுராணங்கள் தவறான வழியில் மனிதர்களை நடத்துவதாகத் தான் கேள்விப்படவில்லையெனவும் கூறி இதற்கான எனது பதில் என்னவென ஒரு நண்பன் கேட்டிருந்தான். மேலும் பேய்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றியும், சிலருக்கு ஏற்படும் உளவியல் நெருக்கீடுகளின் விளைவுகளை பேய்கள் பீடித்ததாய்ச் சொல்வது பற்றிய தகவல்களையும் அவன் குறிப்பிட்டிருந்தான். இன்னொருவன் பேய்கள் இருப்பது உண்மையெனவும் அதற்கான ஆதாரங்கள் எனச் சில தகவல்களையும் தந்திருந்தான். தகவல்கள் எல்லாம் எப்போதுமே உண்மையாயிருப்பதில்லை. மேலும் அவையெல்லாவற்றையும் இங்கே குறிப்பிடுவதென்றால் அதுவே ஒரு பதிவாகிவிடும்.
யாருடையதேனும் நம்பிக்கைகளைக் கேலி செய்வதிலோ அல்லது மதங்களைக் கிண்டலடிப்பதிலோ எனக்கென்றும் ஆர்வமில்லை. ஆயினும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக நான் கருதுவதால் இந்தப்பதிவு.
சைவசமயத்தின் முழுமுதற்கடவுளான சிவனின் வசிப்பிடமாக புராணங்களில் கைலாயமலை குறிப்பிடப்படுகிறது. இப்போது சாதாரண பயணிகளே கைலைக்குச் சென்றுவரக் கூடியதாக இருக்கையில் சிவனும் அவர்தம் பரிவாரங்களும் எங்கே இடம்பெயர்ந்து விட்டார்கள்? அண்மையில் பனிலிங்கம் கூட சில 'பெரிய' மனிதர்களின் கைவரிசையே என்பதை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. மேலும் ஐயப்பனுக்கு மாலைபோட்டு கடும் விரதம் இருந்து சென்று தரிசிக்கும் மகரஜோதி கூட பேய்க்காட்டலே என ஆதாரத்துடன் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. ஊழிக்காலத்தில் அசுரன் ஒருவன் பூமியைப் பாய்ப்போல்ச் சுருட்டிக்கொண்டுபோய் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான் என்றும் பின், மச்ச அவதாரமெடுத்து திருமால் மீண்டும் பூமியை மீட்டார் என்றும் இந்துமத புராணங்கள் கூறுகின்றன. பூமியை எப்படி பாய்போல் சுருட்டுவது? பின் எப்படி அதைக் கடலுக்குள் கொண்டுசென்று ஒளிப்பது? இந்துமத புராணங்களில் காணப்படும் பேய்க்காட்டல்களைப் பற்றி அறிவதற்கு பெரியாரின் நூல்களை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கிறிஸ்துவ மதத்தை எடுத்துக்கொண்டால், அந்த மதத்தின் புனிதநூலான பைபிளிலேயே இரண்டு ஏற்பாடுகள். பழைய ஏற்பாட்டில், சூரியனே புவியைச்சுற்றி வருகிறது எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. பூமிதான் சூரியனைச்சுற்றி வருகின்றது என்று அறிந்து கூறிய மனிதனுக்கு கிறிஸ்துவ மதம் வழங்கிய தண்டனையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். முஸ்லீம் மதத்தில் சமயத்தின் வளர்ச்சிக்காக மரணிப்பவன் சொர்க்கமடைவான் எனச் சொல்வதாகவும், அந்த நம்பிக்கையினாலேயே பல முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் (எல்லோரும் அல்ல, தீவிரவாதிகளாக மாறுபவர்களில் பலர் தங்கள் இனம், மதம் சார்ந்த உரிமைகளுக்காகவே மாறுகிறார்கள் என்பதும், ஆனாலும் அடக்குமுறையாளர்களால் அனைவருமே பயங்கரவாதிகளாக காட்டப்படுவதுமே யதார்த்தம்) என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆக மதங்கள் எப்போதுமே மனிதர்களைச் சரியான வழியிலேயே வழிநடத்துகின்றன என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
சிவபுராணத்தில், புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாமனிதராய்ப் பேயாயக் கணங்களாய் வல்லசுரராகி முனிவராயத் தேவராய்...எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்கிறார் வாதவூரர். இதைப்பாடிய மாணிக்கவாசகர், தேவரோ முனிவரோ அல்ல. அவரும் ஒரு மனிதராய் இருந்தே இதைப் பாடியிருக்கிறார். அவர் ஒன்றும் தேவராக மாறிய பின்னர் இதைப்பாடவில்லை. மேலும் பலர், மனிதனின் முந்திய பிறப்பு கல் (கல்லாய் மனிதராய்) என்று தவறாக அர்த்தம் செய்துகொண்டு விடுகிறார்கள். உண்மையிலேயே அது கல்லாய், மனிதராய் என்று அல்லாமல் கல்லாமனிதராய் (அறிவில்லாத மனிதராய்) என்றே வருகிறது. ஆகவே கல்லாமனிதர், அதாவது உண்மையை அறியாத மனிதர்கள் தான், பேயாய், கணங்களாய், இப்படிப் பலவாய்த் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். முனிவராய்த் தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த வாதவூரர் இறுதியில் தன்னை உணர்ந்து கொண்டேன் என்கிறார். உண்மையை அறிந்து கொண்டுவிட்ட மனிதன் என்கிறார். இங்கே பாடலில் அவர் மனித மனதின் பரிணாம வளர்ச்சி பற்றியே குறிப்பிடுகிறார் என்றே நான் கருதுகிறேன். அதைப்பற்றி எழுதினால் பதிவு நீண்டுவிடும். முடிந்தால் அது இன்னொரு பதிவில்.
அறியாமை தான் ஆனந்தம் எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். சிறுகுழந்தைகளைப் பார்த்தால் சின்னச்சின்னப் பொருட்களினால் அவர்கள் பெறும் அதே ஆனந்தத்தினை, பின்னாளில் அவர்கள் பெறுவதில்லை. உதாரணமாக ஒரு குழந்தையிடம் 1000 ரூபாய் பணத்தாளினையும், 5 ரூபாய் பெறுமதியான ஒரு அழகிய படத்தினையும் கொடுத்து, இரண்டில் எது வேண்டும் என்றால் அது படத்தினையே தேர்வு செய்யும். இப்படித்தானே திருடர்கள் கொடுக்கும் மிட்டாய்களுக்குப் பதிலாக சின்னக் குழந்தைகள் தங்களின் தங்கச்சங்கிலிகளையே இழந்துவிடுகிறார்கள். நட்பு, துணை அல்லது உறவுகள் எம்மை ஏமாற்றுவதை அறியாதவரை அவர்களுடனான உறவில் மகிழ்ச்சியடையும் நாம், ஏமாற்றலை அல்லது துரோகத்தை அறிநதவுடன், அதுவரை இருந்துவந்த சந்தோஷம் பறந்துவிடுகிறது.
பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்த மனோவியல் டொக்ரர் ஒருவர் (டொக்ரர் கோவூர் என நினைக்கிறேன், சரியாக நினைவிலில்லை. 1990 இற்கு முன்னர், ஊரில் இருக்கையில் வாசித்த ஞாபகம்) தனது நூலில், எவ்வாறு பேய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டவர்களை தான் மனோவியல் மூலம் சிகிச்சையளித்துக் குணப்படுத்தியதாகவும். ஒருமுறை தாங்கள் இரவில் பயணம் செய்கையில் வீதியில் வழிமறித்து நின்ற ஒரு வாகனத்தை யானை என்றெண்ணிப் பயந்ததாகவும் (அந்தப் பாதையில் யானைகளின் நடமாட்டம் இருந்ததாம்) பின்னர் உண்மையை அறிந்து சிரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆக அறியாமைதான் பயத்திற்கும் காரணமாய் இருக்கிறது
சிலமாதங்களின் முன் இருநண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் இருவருக்குமே இரவில் தனியே செல்லப் பயம் எனவும், யாரேனும் ஒரு சிறுதவ்வல்கூட, கூடவந்தால் பயமில்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர் (எனக்கும் தானுங்க). அந்தச்சின்னக் குழந்தையால், எதிர்ப்படும் இன்னல்கள் அல்லது பயங்கரங்களில் இருந்து எம்மைக்காப்பாற்ற முடியாது என்பது சர்வ நிச்சயம் என்று எமக்குத் தெரிந்தாலும், எம்மையறியாமலேயே, இன்னொருவர்கூட வருகையில் மனதினில் ஒரு துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். எனவே, கடவுள்கள், பேய்கள் பற்றிய எண்ணங்களும் அவ்வாறே வந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
(கடவுளரை வணங்குபவர்களைப் போலவே பேய்களை வழிபடுபவர்களுமான பில்லிசூனியக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகமிகச் சிறிய அளவினர் என்பதால், பேய்கள் எல்லோருக்குமே கெடுதல் செய்யுமென்ற நம்பிக்கையும் பரவிவிட்டது).
Showing posts with label பேய். Show all posts
Showing posts with label பேய். Show all posts
Thursday, July 16, 2009
Wednesday, July 8, 2009
பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும்
நேற்றைய தினம் இணையத்தளங்களில் மேய்ந்துகொண்டிருந்த வேளையில் மைக்கல் ஜாக்சனின் ஆவியானது அவரது NEVERLAND PLACE இல் தென்பட்டதெனக் கூறப்படும் செய்தியினையும் அது தொடர்பானவொரு காணொலியினையும் பரவலாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பின் ஆவிகள் அல்லது பேய்கள் எனக் கூறப்படுபவை தொடர்பாக google-இல் தேடியே நேற்றைய பொழுதில் நான் தொலைந்தே போனேன்.
உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா? அல்லது பேய் என்பதே ஒரு பேய்க்காட்டல் தானா? எத்தனைபேர் பேயைக் கண்டிருக்கிறார்கள்? உண்மையிலேயே அவர்கள் கண்டது பேய்தான் என்பதை எப்படி நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது? பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரபலமாக்கும் நோக்கத்துடனேயே பேய்கள் அல்லது ஆவிகள் பற்றிய கதைகள் கிளப்பிவிடப்படுகின்றன. ஆனாலும் உலகெங்கும் காணப்படும் அனைத்த சமூகப் பிரிவினரிடையேயும் இந்தப் பேய்கள் பற்றிய நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை கடவுளைப் போலவே பரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாகவும் இருக்கிறது. கடவுள் என்று பரவலாகக் கருதப்படுகின்ற ஒன்று இருக்குமானால் பேய்களும் இருந்தே ஆகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் பலவகையான பேய்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. சேற்றுநிலங்களில் காணப்படும் கொள்ளிவால்ப்பேய். இதைக் கண்டால் கட்டியிருக்கிற வேட்டியை (அந்தக்காலத்தில் அநேகமாக ஆண்கள்தான் சேற்றுநிலங்களுக்குச் செல்வார்கள். அத்துடன் வேட்டி தான் அவர்களுடைய ஆடையாகவும் இருந்து வந்தது) அவிழ்த்து தலையில சுத்திக்கொண்டு கால் தெறிக்க ஓடவேண்டும் என்று சொல்வார்கள். (விஞ்ஞான ரீதியில் இதற்கு காரணம் உயிர்வாயு என்பது வேறு விடயம்). புளியமரத்தில் வசிக்கும் முனி. இரவில் புளியமரத்திற்கு கீழே சென்றாலோ அல்லது அதன் கீழ் படுத்து உறங்கினாலோ முனி அடித்துவிடும் என்பார்கள். இரவில் மரங்களும் சுவாசத்தை மேற்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுவதால் பிராணவாயுவிற்கான பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கநிலை உண்டாகக்கூடும். மோகினிப்பிசாசு. இது இரவுவேளைகளில் தனியே செல்லும் ஆண்களைக் குறிவைத்தே அலையுமாம். வெண்ணிற ஆடையுடன் தோற்றமளிக்கும் இதனிடமிருந்து மல்லிகை வாசம் வீசும் என்றும், இதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமெனில் “சுண்ணாம்பு வைத்திருக்கிறாயா?” என்றோ அல்லது “என்னுடன் வருகிறாயா?” என்றோ பேச்சுக் கொடுத்தால் ஓடிவிடுமாம் என்று சொல்லப் படுகிறது.
இவற்றை விடவும் பில்லி சூனியம் போன்றவை மூலம் ஏவிவிடப்படும் பேய்கள் (இவற்றிலும் பல வகைகள் உண்டு) மற்றும் அவலச்சாவின் மூலம் உயிரிழந்தவர்களின் ஆவிகள் எனப் பல வகையான பேய்கள். கந்த சஷ்டி கவசம் படித்தீர்கள் என்றால் எல்லா வகையான பேய்பிசாசுகளின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.
என்ன பேய்க்கதை கதைக்கிறாய் என்கிறீர்களா? பேய்க்கும் பேய்க்கதைக்கும் என்ன சம்பந்தம்? பொதுவாக நம்பமுடியாத அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களைச் சொல்லும் போது “சும்மா பேய்க் கதை கதைககாதே” என்று சொல்வதுண்டு. சிலவேளைகளில் ஏமாளிகளைக் குறிப்பதற்கும் பேய் (அது ஒரு பேய்ப்பெடியன் அல்லது பேய்பபெட்டை) என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அதேபோல் ஏமாற்றுவதையும் பேய்க்காட்டுதல் என்று சொல்வதுண்டு. அப்படியென்றால் இந்தப் பேய் என்பது என்ன?
சரி! உங்களில் யாராவது பேயைக் கண்டிருக்கிறீர்களா? நான் கண்டதில்லை. ஆனால் காட்டியிருக்கிறேன்.அதாங்க! பேயைச் சொல்லிப் பேய்க்காட்டியிருக்கிறேன். அது 95இல் இடம்பெற்ற யாழப்பாண இடப்பெயர்வுக்கு முந்திய காலம். மாலையில் கொழுத்தப்பட்டிருந்த குப்பை தானாகவே அணைந்து விட்டது போல் தோன்றியிருந்தது. பின் இரவு 9.00 மணியளவில் வீட்டிற்கு வந்திருந்த குழந்தை ஒன்றிடம் (அதற்குப் எட்டு வயதிருக்கும்) காற்று வீசும் போதெல்லாம் சாடையாய் ஒளிர்ந்துகொண்டிருந்த செந்தணலைக் காட்டி அதுதான் கொள்ளிவால்ப்பேய், கிட்டப்போனால் பிடித்துவிடும் எனக்கூறினேன். அது பயந்துகொண்டே தன் தந்தையிடம் சென்றது. அவர் எவ்வளவோ கூறியும் அது சமாதானமாகவில்லை. பின் அவர் ஒரு விளக்கினை ஏற்றிக்கொண்டு அந்தக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு குப்பையருகே சென்று அது வெறும் நெருப்புத்தான். காற்று வீசுகையில் மட்டுமே ஒளிர்கிறது என்றும் விளங்கப்படுத்தியவுடன், அது சிரிததுக்கொண்டே என்னிடம் வந்து “என்னைப் பேய்காட்டப் பார்க்கிறீங்களா?” என்றது.
ஆக அறியாமையைத்தான் பேய் என்கின்றோம். அல்லது அறியாததால் பேய் என்கின்றோம். ஆனாலும் சிலரது அனுபவங்களைக் கேட்டால் அதிர்ந்து விடுகிறோம். ஊரில் இருக்கையில், எமது ஊரைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணிற்கு பேய் பிடித்து விட்டது என்று அவரின் நடவடிக்கைகள் மூலம் ஊகித்துக் கொண்ட உறவினர்கள் அவரை கோவில் ஐயரிடம் கொண்டுபோய்க் காட்டினார்கள். பல பேய்களினால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஐயர், அவரை பேயோட்டுபவர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்கே அந்தப் பேய்கள் ஒவ்வொன்றையும் அவற்றிற்கு விருப்பமானவற்றை (கோழி, சாராயம், மீன், நண்டு போன்றவை. இவை அனைத்தையும் உயிருடன் அந்த வயதான பெண்ணே தன் பொக்கைவாயால் கடித்தும் உடைத்தும் சாப்பிட்டாராம்) அளித்து அந்தப் பேய்களை பேயோட்டுபவர் விரட்டினாராம். அதன்பின் அவர் சாதாரண நிலைக்கு வந்தவிட்டார். நம்ப முடிகிறதா? ஆனால் இதுவும் கதையல்ல நிஜம் தான்.
எப்படி அப்படி? சிலவேளைகளில் அவர் ஒருவித மனநோய்க்கு உட்பட்டிருந்திருக்கலாம். ஆனாலும் இப்போதும் இப்படியான சந்தர்ப்பங்களில் மனோவியல் நிபுணர்களால்கூட ஏதும் செய்யமுடிவதில்லை. மாறாக பேயோட்டுபவர்களால் இவ்வாறானவர்களை இலகுவாகக் குணப்படுத்த முடிகிறது. அப்படியானால் உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழலாம்.
உண்மைகள் வேறு நம்பிக்கைகள் வேறு என்றே நான் கருதுகிறேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். அல்லது அதை நம்பிக் கொண்டிருக்கலாம். அதையெல்லாம் உணமை என்று சொல்ல முடியாது. உண்மைகள் எப்பொழுதுமே எளிதானதாகவும் இயல்பானதாகவுமே இருக்கின்றன. நாம்தான் எமது விருப்புவெறுப்புகளுக்கேற்ப ஒன்றை நம்பத்தொடங்குகின்றோம், அல்லது நம்ப விரும்புகின்றோம். பின் அந்த நம்பிக்கையை உண்மையென்றும் நம்பத்தொடங்குகின்றோம். எனவே நம்பிக்கைகள் எல்லாம் எப்போதுமே உண்மையானவையாக இருப்பதில்லை. பேய்களும் கடவுள்களும் அவ்வாறே. அவை இருக்கின்றன என்று நம்புவதோ, இல்லை என்று நம்புவதோ எமது தனிப்பட்ட விருப்புவெறுப்பு மற்றும் அனுபவங்களால் உருவாகின்றது. ஆனால் அவை இருக்கின்றனவா, இல்லையா என்கின்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவை பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றே நினைக்கின்றேன்.
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்
உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா? அல்லது பேய் என்பதே ஒரு பேய்க்காட்டல் தானா? எத்தனைபேர் பேயைக் கண்டிருக்கிறார்கள்? உண்மையிலேயே அவர்கள் கண்டது பேய்தான் என்பதை எப்படி நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது? பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரபலமாக்கும் நோக்கத்துடனேயே பேய்கள் அல்லது ஆவிகள் பற்றிய கதைகள் கிளப்பிவிடப்படுகின்றன. ஆனாலும் உலகெங்கும் காணப்படும் அனைத்த சமூகப் பிரிவினரிடையேயும் இந்தப் பேய்கள் பற்றிய நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை கடவுளைப் போலவே பரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாகவும் இருக்கிறது. கடவுள் என்று பரவலாகக் கருதப்படுகின்ற ஒன்று இருக்குமானால் பேய்களும் இருந்தே ஆகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் பலவகையான பேய்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. சேற்றுநிலங்களில் காணப்படும் கொள்ளிவால்ப்பேய். இதைக் கண்டால் கட்டியிருக்கிற வேட்டியை (அந்தக்காலத்தில் அநேகமாக ஆண்கள்தான் சேற்றுநிலங்களுக்குச் செல்வார்கள். அத்துடன் வேட்டி தான் அவர்களுடைய ஆடையாகவும் இருந்து வந்தது) அவிழ்த்து தலையில சுத்திக்கொண்டு கால் தெறிக்க ஓடவேண்டும் என்று சொல்வார்கள். (விஞ்ஞான ரீதியில் இதற்கு காரணம் உயிர்வாயு என்பது வேறு விடயம்). புளியமரத்தில் வசிக்கும் முனி. இரவில் புளியமரத்திற்கு கீழே சென்றாலோ அல்லது அதன் கீழ் படுத்து உறங்கினாலோ முனி அடித்துவிடும் என்பார்கள். இரவில் மரங்களும் சுவாசத்தை மேற்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுவதால் பிராணவாயுவிற்கான பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கநிலை உண்டாகக்கூடும். மோகினிப்பிசாசு. இது இரவுவேளைகளில் தனியே செல்லும் ஆண்களைக் குறிவைத்தே அலையுமாம். வெண்ணிற ஆடையுடன் தோற்றமளிக்கும் இதனிடமிருந்து மல்லிகை வாசம் வீசும் என்றும், இதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமெனில் “சுண்ணாம்பு வைத்திருக்கிறாயா?” என்றோ அல்லது “என்னுடன் வருகிறாயா?” என்றோ பேச்சுக் கொடுத்தால் ஓடிவிடுமாம் என்று சொல்லப் படுகிறது.
இவற்றை விடவும் பில்லி சூனியம் போன்றவை மூலம் ஏவிவிடப்படும் பேய்கள் (இவற்றிலும் பல வகைகள் உண்டு) மற்றும் அவலச்சாவின் மூலம் உயிரிழந்தவர்களின் ஆவிகள் எனப் பல வகையான பேய்கள். கந்த சஷ்டி கவசம் படித்தீர்கள் என்றால் எல்லா வகையான பேய்பிசாசுகளின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.
என்ன பேய்க்கதை கதைக்கிறாய் என்கிறீர்களா? பேய்க்கும் பேய்க்கதைக்கும் என்ன சம்பந்தம்? பொதுவாக நம்பமுடியாத அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களைச் சொல்லும் போது “சும்மா பேய்க் கதை கதைககாதே” என்று சொல்வதுண்டு. சிலவேளைகளில் ஏமாளிகளைக் குறிப்பதற்கும் பேய் (அது ஒரு பேய்ப்பெடியன் அல்லது பேய்பபெட்டை) என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அதேபோல் ஏமாற்றுவதையும் பேய்க்காட்டுதல் என்று சொல்வதுண்டு. அப்படியென்றால் இந்தப் பேய் என்பது என்ன?
சரி! உங்களில் யாராவது பேயைக் கண்டிருக்கிறீர்களா? நான் கண்டதில்லை. ஆனால் காட்டியிருக்கிறேன்.அதாங்க! பேயைச் சொல்லிப் பேய்க்காட்டியிருக்கிறேன். அது 95இல் இடம்பெற்ற யாழப்பாண இடப்பெயர்வுக்கு முந்திய காலம். மாலையில் கொழுத்தப்பட்டிருந்த குப்பை தானாகவே அணைந்து விட்டது போல் தோன்றியிருந்தது. பின் இரவு 9.00 மணியளவில் வீட்டிற்கு வந்திருந்த குழந்தை ஒன்றிடம் (அதற்குப் எட்டு வயதிருக்கும்) காற்று வீசும் போதெல்லாம் சாடையாய் ஒளிர்ந்துகொண்டிருந்த செந்தணலைக் காட்டி அதுதான் கொள்ளிவால்ப்பேய், கிட்டப்போனால் பிடித்துவிடும் எனக்கூறினேன். அது பயந்துகொண்டே தன் தந்தையிடம் சென்றது. அவர் எவ்வளவோ கூறியும் அது சமாதானமாகவில்லை. பின் அவர் ஒரு விளக்கினை ஏற்றிக்கொண்டு அந்தக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு குப்பையருகே சென்று அது வெறும் நெருப்புத்தான். காற்று வீசுகையில் மட்டுமே ஒளிர்கிறது என்றும் விளங்கப்படுத்தியவுடன், அது சிரிததுக்கொண்டே என்னிடம் வந்து “என்னைப் பேய்காட்டப் பார்க்கிறீங்களா?” என்றது.
ஆக அறியாமையைத்தான் பேய் என்கின்றோம். அல்லது அறியாததால் பேய் என்கின்றோம். ஆனாலும் சிலரது அனுபவங்களைக் கேட்டால் அதிர்ந்து விடுகிறோம். ஊரில் இருக்கையில், எமது ஊரைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணிற்கு பேய் பிடித்து விட்டது என்று அவரின் நடவடிக்கைகள் மூலம் ஊகித்துக் கொண்ட உறவினர்கள் அவரை கோவில் ஐயரிடம் கொண்டுபோய்க் காட்டினார்கள். பல பேய்களினால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஐயர், அவரை பேயோட்டுபவர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்கே அந்தப் பேய்கள் ஒவ்வொன்றையும் அவற்றிற்கு விருப்பமானவற்றை (கோழி, சாராயம், மீன், நண்டு போன்றவை. இவை அனைத்தையும் உயிருடன் அந்த வயதான பெண்ணே தன் பொக்கைவாயால் கடித்தும் உடைத்தும் சாப்பிட்டாராம்) அளித்து அந்தப் பேய்களை பேயோட்டுபவர் விரட்டினாராம். அதன்பின் அவர் சாதாரண நிலைக்கு வந்தவிட்டார். நம்ப முடிகிறதா? ஆனால் இதுவும் கதையல்ல நிஜம் தான்.
எப்படி அப்படி? சிலவேளைகளில் அவர் ஒருவித மனநோய்க்கு உட்பட்டிருந்திருக்கலாம். ஆனாலும் இப்போதும் இப்படியான சந்தர்ப்பங்களில் மனோவியல் நிபுணர்களால்கூட ஏதும் செய்யமுடிவதில்லை. மாறாக பேயோட்டுபவர்களால் இவ்வாறானவர்களை இலகுவாகக் குணப்படுத்த முடிகிறது. அப்படியானால் உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழலாம்.
உண்மைகள் வேறு நம்பிக்கைகள் வேறு என்றே நான் கருதுகிறேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். அல்லது அதை நம்பிக் கொண்டிருக்கலாம். அதையெல்லாம் உணமை என்று சொல்ல முடியாது. உண்மைகள் எப்பொழுதுமே எளிதானதாகவும் இயல்பானதாகவுமே இருக்கின்றன. நாம்தான் எமது விருப்புவெறுப்புகளுக்கேற்ப ஒன்றை நம்பத்தொடங்குகின்றோம், அல்லது நம்ப விரும்புகின்றோம். பின் அந்த நம்பிக்கையை உண்மையென்றும் நம்பத்தொடங்குகின்றோம். எனவே நம்பிக்கைகள் எல்லாம் எப்போதுமே உண்மையானவையாக இருப்பதில்லை. பேய்களும் கடவுள்களும் அவ்வாறே. அவை இருக்கின்றன என்று நம்புவதோ, இல்லை என்று நம்புவதோ எமது தனிப்பட்ட விருப்புவெறுப்பு மற்றும் அனுபவங்களால் உருவாகின்றது. ஆனால் அவை இருக்கின்றனவா, இல்லையா என்கின்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவை பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றே நினைக்கின்றேன்.
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்
Thursday, April 23, 2009
கடவுளர் பற்றிய கனவிலிருப்போர்க்கு.....
இடுக்கண் களைந்தெம்
இன்னல் தீர்க்க வராத
“இரக்கமிலி”களைப்
பற்றிய கனவிலிருப்போரே!
கண்டேன்!
அந்த கடவுளரை
அண்டேன் என
நின்றவன் நான்,
விண்டேன் உம்மனக்குறைகளை.
ரொம்பப் பாவம் அவர்கள்.
அவர்தம் குறைகளை முறையிட,
ஆளின்றிய அவ(/க)தி நிலையில் அவர்கள்.
உம்குறை தீர்க்க
அவர்கட்கும் ஆசையாம்.
ஆனாலும் எல்லோர்க்கும்
வயதாகி விட்டதாம்.
அவதரித்து வருதற்கும்
அலுப்பாயிருக்கிறதாம்.
சிவனின் நெற்றிக்கண்ணில்
பூ-வளர்ந்து விட்டதாம் (catract).
அறுவைச் சிகிச்சையாலும்
அதையகற்ற முடியாதாம்.
சக்திக்கு மாதவிலக்கு நின்று
நெடுங்காலமாகி விட்டதாம்.
பேரப்பிள்ளைகள் வேண்டி
பிள்ளைகளுடன் பிரச்சனையாம்.
பிள்ளையாரால் ஒரு
பிள்ளையை உருவாக்க
தொப்பை தடையென்று
gym-இற்குப் போய் treadmill-இல் ஓடி
அதையும் உடைத்தாயிற்றாம்.
முருகனுக்கோ முதிர்ச்சியடையுமுன்பே
திருமணமாகி அதுவும்
இருமணமாகி, ஏற்பட்ட
சக்களத்திச் சண்டையினால்
உண்டான உளவியல் நெருக்கீட்டால்
பெண்டிரை அண்டவே பயமாம்.
யுகந்தோறும் அவதரித்துக்
களைத்த கண்ணனால்
அடிமுடி தேடி, பட்ட அவமானத்துடன்
நாபிக் கமலத்தில் இன்னோர்
அயனை இனிநினைக்கவே முடியாதாம்.
பிரம்மனுக்கோ
பிரணவ மந்திரமே மறந்து விட்டதாம்.
பின் எப்படி படைப்பதாம்
அதுவம் இன்னோர் கடவுளை?
ஆஞ்சநேயர் இன்னமும்
பிரமச்சரிய விரதத்தையே
பின்பற்றுகிறாராம்.
ஆதலினால்,
கடவுளர் பற்றிய
கனவினில் இருப்போரே!
உறக்கம் கலைத்து
உண்மையை உணருங்கள்.
இல்லையேல்,
“வாருங்கள் நாங்களினி
பேய்களை வழிபடுவோம்”
எனச் சிலர் உங்களை
தடம் மாற்றக்கூடும்.
நக்கிப் பிழைத்தற்கா, இல்லை
நாய் வாழ்க்கை வாழ்தற்கா
நாமங்கு தவம் செய்தோம்?
எமக்காக இங்கே
கடவுளரும் வரப்போவதில்லை.
பேய்களும் தரப்போவதில்லை
எமக்கான வரத்தை.
இன்னல் தீர்க்க வராத
“இரக்கமிலி”களைப்
பற்றிய கனவிலிருப்போரே!
கண்டேன்!
அந்த கடவுளரை
அண்டேன் என
நின்றவன் நான்,
விண்டேன் உம்மனக்குறைகளை.
ரொம்பப் பாவம் அவர்கள்.
அவர்தம் குறைகளை முறையிட,
ஆளின்றிய அவ(/க)தி நிலையில் அவர்கள்.
உம்குறை தீர்க்க
அவர்கட்கும் ஆசையாம்.
ஆனாலும் எல்லோர்க்கும்
வயதாகி விட்டதாம்.
அவதரித்து வருதற்கும்
அலுப்பாயிருக்கிறதாம்.
சிவனின் நெற்றிக்கண்ணில்
பூ-வளர்ந்து விட்டதாம் (catract).
அறுவைச் சிகிச்சையாலும்
அதையகற்ற முடியாதாம்.
சக்திக்கு மாதவிலக்கு நின்று
நெடுங்காலமாகி விட்டதாம்.
பேரப்பிள்ளைகள் வேண்டி
பிள்ளைகளுடன் பிரச்சனையாம்.
பிள்ளையாரால் ஒரு
பிள்ளையை உருவாக்க
தொப்பை தடையென்று
gym-இற்குப் போய் treadmill-இல் ஓடி
அதையும் உடைத்தாயிற்றாம்.
முருகனுக்கோ முதிர்ச்சியடையுமுன்பே
திருமணமாகி அதுவும்
இருமணமாகி, ஏற்பட்ட
சக்களத்திச் சண்டையினால்
உண்டான உளவியல் நெருக்கீட்டால்
பெண்டிரை அண்டவே பயமாம்.
யுகந்தோறும் அவதரித்துக்
களைத்த கண்ணனால்
அடிமுடி தேடி, பட்ட அவமானத்துடன்
நாபிக் கமலத்தில் இன்னோர்
அயனை இனிநினைக்கவே முடியாதாம்.
பிரம்மனுக்கோ
பிரணவ மந்திரமே மறந்து விட்டதாம்.
பின் எப்படி படைப்பதாம்
அதுவம் இன்னோர் கடவுளை?
ஆஞ்சநேயர் இன்னமும்
பிரமச்சரிய விரதத்தையே
பின்பற்றுகிறாராம்.
ஆதலினால்,
கடவுளர் பற்றிய
கனவினில் இருப்போரே!
உறக்கம் கலைத்து
உண்மையை உணருங்கள்.
இல்லையேல்,
“வாருங்கள் நாங்களினி
பேய்களை வழிபடுவோம்”
எனச் சிலர் உங்களை
தடம் மாற்றக்கூடும்.
நக்கிப் பிழைத்தற்கா, இல்லை
நாய் வாழ்க்கை வாழ்தற்கா
நாமங்கு தவம் செய்தோம்?
எமக்காக இங்கே
கடவுளரும் வரப்போவதில்லை.
பேய்களும் தரப்போவதில்லை
எமக்கான வரத்தை.
Subscribe to:
Comments (Atom)